அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். நான் கூறிய மருந்து வேறு, அவர் பதில் அளித்த மருந்து வேறு. மேலும் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக வந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று கூறுகிறார். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் உண்மைகள் வெளிவராது. மெத்தனால் ஆந்திராவில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். அதனால் இதில் சிபிசிஐடி விசாரணை நடத்த முடியாது. சிபிஐ அமைப்புதான் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.