இதில் விஷச்சாராயம் விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன், மனைவி விஜயா ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே கள்ளக்குறிச்சி பகுதியில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். அதேபோல தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையிலான விசாரணை குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: முக்கிய நபராக கருதப்படும் மாதேஷ் என்பவர் உள்பட இதுவரை 11 பேர் கைது!! appeared first on Dinakaran.