அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை நான் செலுத்தி உள்ளேன். லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தருமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனிடையே, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், ஜி.எஸ்.டி. ஒப்பந்தத்தின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி, தான் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடிகர் விஷால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தத்தின் அசல் தங்களிடம் இல்லை என்றார். இதையடுத்து, லைகா நிறுவனத்தின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.
The post சண்டக்கோழி-2 படத்திற்கான வெளியீட்டு விவகாரம்; லைகா நிறுவனத்திடம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கேட்டு நடிகர் விஷால் மனு appeared first on Dinakaran.