மரத்தில் கார் மோதி ராணுவ வீரர், நண்பர் பலி

புளியங்குடி: மரத்தில் கார் மோதி ராணுவ வீரர், நண்பர் பலியாகினர். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (33). ராணுவ வீரரான இவர் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணியாற்றி வந்தார். தற்போது 2 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பாஸ்கர் மற்றும் அவரது உறவினரான விருதுநகர் மாவட்டம் சேத்தூரை சேர்ந்த மாரிமுத்து (25) மற்றும் நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணராஜ் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு குற்றாலத்திற்கு காரில் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கிருஷ்ணராஜ் காரை ஓட்டி வந்தார்.

அதிகாலை 3 மணியளவில் புளியங்குடியை அடுத்த நவா சாலை அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் ராணுவ வீரர் பாஸ்கர், அவரது நண்பர் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். உறவினர் மாரிமுத்து படுகாயம் அடைந்தார்.

The post மரத்தில் கார் மோதி ராணுவ வீரர், நண்பர் பலி appeared first on Dinakaran.

Related Stories: