விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்த சம்பவத்தில் 2 விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தலைமையில் ஒரு குழு விசாரிக்கும் எனவும் கூறினார். விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழக்க ஹைட்ரஜன் சல்பைட் வாயு காரணம் என மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

The post விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: