புதுக்குப்பம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மொபட்டில் இருந்த வேம்பு சுமார் 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து இறந்தார். காசிநாதன் படுகாயமடைந்து மேம்பாலத்தின் மேலேயே கிடந்துள்ளார். அவரை வாகனஓட்டிகள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசிநாதனும் இறந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விருத்தாசலம் அருகே விபத்தில் கணவன், மனைவி பலி appeared first on Dinakaran.