இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்கான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் முதல் சுற்றிலேயே வாக்கு எண்ணும் இயந்திரம் ஒன்று பழுதானது. அதனால் முதல் சுற்று எண்ணிக்கை வெளியிடுவதில் காலதாமதம் ஆனது. மேலும் இதே சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. மேலும் தி.நகர் தொகுதிக்கான ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு காணப்பட்டது. இவ்வாறு மொத்தம் 5 வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
இதுகுறித்து தென்சென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அமித் கூறியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் பழுதான 4 வாக்குப்பதிவு எந்திரங்களில் 2 இயந்திரங்கள் சரி செய்யும் நிலையில் உள்ளது. எஞ்சிய 2 இயந்திரங்கள் சரி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதேபோன்று தி.நகரில் ஒரு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை வேறுபட்டுள்ளது. ஒருவேளை 3 வாக்குப்பதிவு இந்திரங்கள் பழுது சரி செய்ய முடியாமல் போனால் கூட ஒரு வாக்கு பதிவு இயந்திரத்திற்கு தலா 1500 வாக்குகள் வீதம் 4500 வாக்குகள் பதிவாகி இருக்கும். ஆனால் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசமானது 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் இந்த வாக்கு இயந்திரங்கள் பழுது குறித்து எந்த பிரச்னையும் இல்லை. 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் உள்ளதை வைத்து முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தேவைப்பட்டால் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டை எண்ணுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது: தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.