இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, கரூரில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜோதிமணி போட்டியிட்ட நிலையில் முன்னிலை வகித்து வருகிறார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 51,156 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 10,026 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 39,846 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
The post கரூரில் மீண்டும் வெல்வாரா ஜோதிமணி?.. கடும் போட்டியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக: எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்..!! appeared first on Dinakaran.