வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

டெல்லி: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நாளை முதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

The post வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: