கோவை வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயில் கேட் சேதம்

 

கோவை, ஜூன் 3: மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மாவட்டத்தில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியற் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கிரேன் வாகனம் ஒன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது, நுழைவு வாயில் பகுதியில் இருந்த கேட் மீது கிரேன் மோதியதில் கேட் சேதமடைந்தது. இதையடுத்து, சேதமடைந்த கேட் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று கேட் சரிசெய்யப்பட்டது. மேலும், வாக்கு எண்ணும் பணி நாளை நடக்கும் நிலையில், நுழைவு வாயில் கேட் சேதமடைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கோவை வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயில் கேட் சேதம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.