அப்போது அவர்கள் காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இதில், வாக்கு எண்ணிக்கையின் போது, மையத்தில் திமுக முகவர்கள் மிக கவனமாக பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், அங்கு கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகள் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பிரச்னைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியாக அணுகுவது குறித்து சட்டத்துறை பிரிவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆலோசனைகள் வழங்கினார். அத்தோடு, ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரின் பிறந்த நாளை, மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
The post வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான கூட்டத்தில் அறிவுரை appeared first on Dinakaran.