தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணி தலைவர்கள், பாஜ உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றி செய்திக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும். ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இதுதொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பாஜ வீழட்டும், இந்தியா வெல்லட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை appeared first on Dinakaran.