ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆர்.ஆர். சாலையில் துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம் அடைந்துள்ளனர். சரஸ்வதி என்பவரின் இறுதிச் சடங்கு ஊர்வலத்திற்காக வைக்கப்பட்ட பட்டாசு தவறுதலாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.