பால் வியாபாரி உடலுக்கு ஆர்டிஓ அஞ்சலி

 

அரூர், மே 30: மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், திருப்பூர் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வந்தவருமான முனிராஜ் என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தினரால் தானம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உடலுறுப்பு தானம் செய்த முனிராஜ் உடலுக்கு அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் இராஜசேகர், தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் அரூர் தாசில்தார் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post பால் வியாபாரி உடலுக்கு ஆர்டிஓ அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: