ஆன்லைன் ரம்மி தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் ரம்மி தற்கொலைகளை தடுக்க தீர்வு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடை வாங்க முடியாது.

இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? ஏதேனும் சிறப்பு வழிகளைக் கண்டறிந்து ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறப்போகிறதா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் ரம்மி தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: