அந்த வகையில் கடந்த 16ம் தேதி வேம்பையாபுரத்தில் ஒரு ஆட்டையும், அனவன் குடியிருப்பு கொட்டகையிலிருந்து மற்றொரு ஆட்டையும் சிறுத்தைகள் தாக்கி வனப்பகுதிக்கு இழுத்து சென்றன. இதை அடுத்து வேம்பையாபுரத்தில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் சிக்கியுள்ளது. தற்போது அனவன் குடியிருப்பு பகுதியில் 4வது சிறுத்தை சிக்கியுள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post அம்பாசமுத்திரம் அருகே ஊருக்குள் புகுந்து சிறுத்தைகள் அட்டாசம்: ஒரே வாரத்தில் 4 சிறுத்தைகள் சிக்கியதாக வனத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.