கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய காருக்கு பூஜை போட்ட போது நூற்றுக்கால் மண்டபத்தில் மோதியதில் கார் சேதமடைந்தது. தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபரீதம் ஏற்பட்டது. கார் வேகமாக பாய்ந்ததில் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.