கஞ்சாவை பதுக்கி விற்றவர் கைது

தர்மபுரி, ஏப்.28: அதியமான்கோட்டை போலீஸ் எஸ்ஐ விமல்குமார் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலைக்காரன்கொட்டாய் பகுதியில், மாட்டு கொட்டகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாட்டுக் கொட்டகையில் சோதனையிட்டதில், அப்பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சாவை பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: