சூதாடிய 5 பேர் கைது ; டூவீலர்கள் பறிமுதல்

தர்மபுரி, ஏப்.28: தர்மபுரி மாவட்டம், ஏரியூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூங்கில் மடுவு என்னுமிடத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5பேர் கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு(40), வினோத்குமார்(30), கந்தசாமி(45), ஹரிக்குமார்(33) மற்றும் செல்வராஜ்(47) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, 5பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சூதாடிய 5 பேர் கைது ; டூவீலர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: