லாரி மோதி வாலிபர் பலி

விருத்தாசலம், ஏப். 28: விருத்தாசலத்தை அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தரசோழபுரத்தை சேர்ந்தவர் ஜோதி மகன் பாஸ்கரன்(33). இவர் சம்பவத்தன்று இரவு தனது உறவினரான மாளிகைக்கோட்டம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் கார்த்திக்(30) என்பவருடன் சொந்த வேலை காரணமாக தனது பைக்கில் விருத்தாசலம் சென்று விட்டு, திரும்ப பெண்ணாடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மணவாளநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதியதில் இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தனர். இதில், பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், விபத்தில் பலியான பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாஸ்கரன் மனைவி வனிதா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: