போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்: யூஜிசி செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெறாத ஆன்லைன், திறந்த மற்றும் தொலைதூர கற்றல் படிப்புகளில் சேர வேண்டாம் என தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழு எச்சரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ‘’10 நாட்களில் எம்.பி.ஏ. படிப்பு’’ என்ற தவறான வழிகாட்டுதலில் மாணவர் சேர்க்கை விளம்பரங்கள் பரவி வருகின்றன. இதுபோன்ற போலி ஆன்லைன் திட்டங்களை நம்ப வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனீஷ் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், ‘சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் உயர்கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டங்களை குறுகிய காலத்தில் ஆன்லைனில் படிக்கலாம் என அறிவிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் 10 நாட்களில் எம்.பி.ஏ. படிப்பு திட்டம். உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி எந்தவொரு ஆன்லைன் பட்டப்படிப்பு திட்டத்தையும் வழங்க யு.ஜி.சி.யிடம் ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு ஆன்லைன் திட்டங்களை வழங்க அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல் deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் இருக்கிறது. எந்தவொரு ஆன்லைன் திட்டத்துக்கும் விண்ணப்பிக்கும் முன்பு அல்லது அதில் சேருவதற்கு முன்பு அந்த திட்டம் செல்லுபடியானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்’ என மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

The post போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்: யூஜிசி செயலாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: