மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்

சென்னை: தேர்தல் அரசியலுக்காக சிறுபான்மை முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி வெறுப்பு பிரசாரம் செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத், மத்திய சென்னை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.வி.ராஜா, செயலாளர் பாண்டித்துரை, மத்திய சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சலீம் ஜாபர் ஆகியோர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

The post மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: