அப்போது அந்த பயணி உடுத்தி இருந்த ஆடையில் பல்வேறு இடங்களில் ரகசிய அறைகள் அமைத்து அதற்குள் பணத்தை கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அத்தனை பணத்தையும் எடுக்க கூறியபோது பல இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக அவர் பணத்தை வெளியே எடுத்தார். இதை பார்த்து போலீசாரே அதிர்ந்து போனார்கள். இந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லை. மொத்த அவர் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ் appeared first on Dinakaran.