ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ்

கோவை: கேரளா மாநிலத்தில் வரும் 26ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக, கேரள எல்லையான வளையார் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று அந்த செக்போஸ்டில் இருந்த கேரளா போலீசார் கோவையிலிருந்து கேரள மாநிலம் திருச்சூருக்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பேருந்தில் பயணம் செய்த கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ (40) என்ற பயணியை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பயணி உடுத்தி இருந்த ஆடையில் பல்வேறு இடங்களில் ரகசிய அறைகள் அமைத்து அதற்குள் பணத்தை கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அத்தனை பணத்தையும் எடுக்க கூறியபோது பல இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக அவர் பணத்தை வெளியே எடுத்தார். இதை பார்த்து போலீசாரே அதிர்ந்து போனார்கள். இந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லை. மொத்த அவர் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: