மக்களின் வரிப் பணத்தில் தான் இதெல்லாம் கிடைக்கிறது என்பதை அவர் மறந்து விடுகிறார். எம்பிக்களை வாங்குவதற்கு பாஜவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தாகும். மதவாத வைரஸ் நோய் பரவாமல் இருக்க அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலில் யாரும் பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல ஒரு எம்பியை தேர்வு செய்தால் போதும். எம்பிக்கள் சேர்ந்து திறமையான ஒருவரை பிரதமராக தேர்வு செய்து கொள்வார்கள். நான் காங்கிரஸ்காரன் கிடையாது. ஆனாலும் ராஜாவை எதிர்த்து கேள்வி கேட்கும் சசி தரூருக்கு ஆதரவளிப்பதற்காக திருவனந்தபுரம் வந்துள்ளேன். திருவனந்தபுரத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் கர்நாடகாவிலிருந்து மூன்று முறை மேலவை எம்பியாக இருந்துள்ளார். ஆனால் கர்நாடக மாநிலத்திற்கு அவர் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கர்நாடகாவில் சீட் கிடைக்காததால் தான் அவர் திருவனந்தபுரத்திற்கு வந்து போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
The post தினமும் காலையில் எழுந்தவுடன் 100 பொய்களை கூறுகிறார் மோடி: பிரகாஷ் ராஜ் தாக்கு appeared first on Dinakaran.