நடிகர் விஜய்யின் புதிய திரைப்படம் வெளியீடு போன்றே இப்படத்தையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றனர். தமிழ்நாட்டில் சுமார் 600 திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் முதல் நாளில் மட்டும் ரூ.4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அமெரிக்கா தவிர உலகம் முழுவதும் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டதால் வசூலில் மேலும் ஒரு சாதனை படைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
The post 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான கில்லி: தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4கோடி வசூல் என தகவல் appeared first on Dinakaran.