தஞ்சையில் 25 கிலோ எடை கொண்ட ஒரு மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம்: மருத்துவ குணம் கொண்ட மீன் என்பதால் அதிக விலை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு மீன் சுமார் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கரையூர் தெரிவை சேர்ந்த ரவி என்ற மீனவரின் வலையில் கூறல் கத்தாழை எனப்படும் அரியவகை மீன் ஒன்று அகப்பட்டது. 25 கிலோ கொண்ட அந்த மீனை வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

முடிவில் ரூ.1,87,700க்கு கூறல் கத்தாழை மீன் ஏலம் போனது. ஒரே மீன் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கூறல் கத்தாழை மீன் மருத்துவ குணம் கொண்டதால் இவ்வளவு விலை கொடுத்து வியாபாரிகள் ஏலம் எடுத்துள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சையில் 25 கிலோ எடை கொண்ட ஒரு மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம்: மருத்துவ குணம் கொண்ட மீன் என்பதால் அதிக விலை appeared first on Dinakaran.

Related Stories: