ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை ரொக்கமாக தருவதை என்றுமே நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அனைவரும் ஏற்கும் வகையில் வேறு விதமாக திட்டத்தை கொண்டு வருவோம்’’ என கூறியிருந்தார். தற்போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருபடி மேலே போய், ‘மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வருவோம்’ என வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனாலும், மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். தேர்தல் பத்திரம் திட்டம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தது. எனவே நாங்கள் அனைத்து பங்குதாரர்களிடமும் விரிவான ஆலோசனை நடத்தி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அரசியலில் இருந்து கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவோம்’’ என்றார். நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
The post பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டு வருவோம்: நிர்மலா சீதாராமன் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.