கிளாம்பாக்கத்திலிருந்து நாளை (22ம் தேதி) 527 பேருந்துகளும் நாளை மறுநாள் 628 பேருந்துகளும் மேலும் சென்னை மாதவரத்திலிருந்து நாளை 30, நாளை மறுநாள் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை 910 பேருந்துகளும் நாளை மறுநாள் 910 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 40 குளிர்சாதன பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படும். சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூருவிலிருந்து முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
The post சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு 1,467 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.