புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் கண்ணன் மகன் விக்னேஷ் வாக்குச்சாவடிக்கு காங்கிரஸ் துண்டு அணிந்து சென்றதாக குற்றச்சாட்டினர். எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.