இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்

டெல்லி: இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால் என அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. தனது சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் ஜாமீன் பெற முயற்சிக்கிறார் என கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கு டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மருத்துவர்களின் பரிந்துரைப்படியே கெஜ்ரிவால் உணவுகளை உட்கொள்கிறார் என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.

The post இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார் appeared first on Dinakaran.

Related Stories: