விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதம்!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடா பந்தர் தெருவில் உள்ள மருத்துவக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதமடைந்தது. மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீயை 5 வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் அணைந்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் காயங்களோ உயிர்சேதமோ ஏற்படவில்லை எனவும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த மார்ச் 30ம் தேதி, ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது ஒரு கோவிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. துவ்வாவில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விழாவுக்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை தீயில் எரிந்து நாசமானது.

வேணுகோபால சுவாமி கோவிலில் பக்தர்கள் சிலர் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பெரும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தீ விபத்து இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடினர். கோவில் வளாகத்தில் இருந்து பெரிய தீப்பிழம்புகள் வெளியேறியது. தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

The post விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதம்! appeared first on Dinakaran.

Related Stories: