அருணாச்சலில் இருந்து போனா பாஸ்போர்ட், விசா வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்… பொண்டாட்டி, புள்ளைய கூட்டிகிட்டு சீனாவுக்கு போக போறேன்

புதுச்சேரியில் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து புதுவை- கடலூர் சாலையில் சிங்காரவேலர் சிலை அருகே நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது: தனியார் சாராயம் காய்ச்சிக்கிட்டு இருந்தான் முன்னாடி… இருட்டுல… காட்டுல… ஊறல் போட்டு… நாங்களெல்லாம் ரொம்ப சின்ன பிள்ளையா இருக்கும்போது சாராய ஊறலு, திருவிழா தேருக்கு காய்ச்சும்போது எங்களது சித்தப்பன், பெரியப்பன் எல்லாம் டவுசரோடு தூக்கிட்டு போவாங்க… சாராய காய்ச்ச… அப்பெல்லாம் எங்களுக்கு தெரியாது இது.

அன்றைக்கு சாராயம் காய்ச்சு விற்றவரெல்லாம் இன்றைக்கு பல்கலைக்கழக வேந்தர்கள். இப்ப எனக்கு பாஸ்போர்ட் இல்ல. நான் எந்த நாட்டுக்கு போக முடியும்னா. ஒரே நாட்டுக்குதான் போக முடியும். சீனாவுக்கு… அருணாச்சல பிரதேசம் என்னுது… அங்கிருந்து என் நாட்டுக்கு வர பாஸ்போர்ட், விசா தேவையில்லை என்று சொல்லிட்டான். அதனால நான் என் பொண்டாட்டி, பிள்ளைகளை கூட்டிக்கிட்டு என்னோடு நெருக்கமாக இருக்கிறவங்கள யாரு வர்ற… தென்னரசு, கின்னரசு எங்க ஐயா எல்லாரையும் கூட்டிக்கிட்டு 10, 20 குடும்பம் அப்படியே கிளம்பி அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சீனாவுக்குள் போயிட்டு ஐயா நாங்க உங்களோடே இங்கே இருந்துடுறோம் ஐயா என போகப் போறேன். வேற வழி கிடையாது. வர்றதுன்னா நீயும் வா…. இவ்வாறு அவர் பேசினார்.

The post அருணாச்சலில் இருந்து போனா பாஸ்போர்ட், விசா வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்… பொண்டாட்டி, புள்ளைய கூட்டிகிட்டு சீனாவுக்கு போக போறேன் appeared first on Dinakaran.

Related Stories: