மக்களவை தேர்தலையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை..மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள்..!!

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி இன்று முதல் மதுபானக்கடைகள் மூடப்படுவதால் அரசின் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்களவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை எவ்வித மதுபான விற்பனையும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள், எப்.எல்.2 மன்றங்கள், மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்கண்ட தேதிகளில் செயல்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வழங்க, இருப்பு வைக்க மதுகுடிப்போர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

The post மக்களவை தேர்தலையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை..மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: