தெருமுனை பிரசார கூட்டம் மோடியின் பேச்சில் வாரண்டியும் இல்லை கேரண்டியும் இல்லை: சுந்தர் எம்எல்ஏ பேச்சு

மதுராந்தகம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி, மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்வாய், பழமத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து தெருமுனை பிரசாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், சுந்தரவரதன், திருஞான செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், காஸ் விலையை உயர்த்தியவர் பிரதமர் மோடி, மாநில உரிமைகளையும் பறித்துவிட்டார். பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தி விட்டார்.

மோடியின் பேச்சில் வாரண்டியும் இல்லை, கேரண்டியும் இல்லை. எனவே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து செல்வத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார். திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தையூர், புதுப்பாக்கம், சோனலூர், வெளிச்சை, பொன்மார், போலச்சேரி ஆகிய கிராமங்களில் காஞ்சிபுர் திமுக வேட்பாளர் செல்வம் பிரசாரத்தை மேற்கொண்டார்.

அவருடன், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், விசிக மாவட்ட செயலாளர் கேது தென்னவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன், காங்கிரஸ் வட்டார தலைவர் பழனி, சின்னராஜ், மதிமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஜெகதீசன் மற்றும் கூட்டணி கட்சிகளின் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

The post தெருமுனை பிரசார கூட்டம் மோடியின் பேச்சில் வாரண்டியும் இல்லை கேரண்டியும் இல்லை: சுந்தர் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: