ஆவின் பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்து செய்தியா?: ஆவின் நிறுவனம் விளக்கம்

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடப்படுவதில்லை என வெளியான செய்திக்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆவின் நிறுவனம் வெயிளிட்ட அறிக்கை:
ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது. இந்த முறை பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ்ப்புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே இந்த வருடமும் அச்சிடப்படவில்லை என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆவின் பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்து செய்தியா?: ஆவின் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: