மாவா தயாரித்து விற்ற இருவர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தியபோது, அவ்வழியே வந்த ஒருவரை பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் குட்கா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் இருந்தது. விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மேடி (35) என்பதும், புளியந்தோப்பு பகுதியில் பேக் கடை வைத்து நடத்தி வருவதும், வீட்டில் மாவா தயாரித்து விற்றதும் தெரிய வந்தது. இவருக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்த பெரியமேடு பகுதியை சேர்ந்த விகாஸ் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post மாவா தயாரித்து விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: