பேருந்து நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது

மாதவரம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாரிமுனை வழியாக செல்லும் மாநகர் பேருந்து தடம் எண் 15 கடந்த 13ம் தேதி இரவு கோயம்பேட்டில் இருந்து பாரிமுனைக்கு சென்று கொண்டிருந்தது. அதில் நடத்துனராக ராஜேந்திரன்(54) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது அமைந்தகரை மார்க்கெட் அருகே வந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் திடீரென பேருந்தை வழிமடக்கி கடும் வாக்குவாதத்தில ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட ராஜேந்திரனை இருவரும் சரமாரியாக தாக்கி விட்டு பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த உமர்பார்க் (24) என்பவரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

The post பேருந்து நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: