அத்திப்பழ அல்வா

தேவையான பொருள்கள் :

அத்திப்பழம் – 10
பேரிச்சம் பழம் – 30
பாதாம் தூள் – 3 மேசைக் கரண்டி
சீனி – ஒரு கப்
நெய் – 50 கிராம்
எண்ணெய் – கால் கப்
கார்ன் ஃப்ளார் – 3 மேசைக் கரண்டி
ஏலக்காய்த் தூள் – சிறிது
முந்திரி – 8

செய்முறை:

அத்திப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பேரிச்சம் பழத்திலுள்ள விதையை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரியை உடைத்துப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். ஒரு நாண் – ஸ்டிக் கடாயில் சீனியைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.அத்துடன் நறுக்கிய அத்திப்பழம், பேரிச்சம் பழம், பாதாம் தூள், ஏலக்காய்த் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கிளறி விட்டு சுருள வேக விடவும். அத்துடன் கால் கப் தண்ணீரில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து ஊற்றி, நன்கு இடை விடாது கிளறவும். பிறகு சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.

The post அத்திப்பழ அல்வா appeared first on Dinakaran.