தேர்தல் பரப்புரை நிறைவு பெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது நீலகிரியில் பிரச்சாரமானது சூடுபிடித்துள்ளது. அதை தொடர்ந்து பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜே.பி.நட்டா உதகையில் நாளை ரோடு ஷோ நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ரத்தாகும் பா.ஜ.க. தலைவர்களின் ரோடு ஷோவால் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
The post உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து..!! appeared first on Dinakaran.