அப்போது அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் கலாநிதி வீராசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பேசுகையில், “குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதால் ஏற்படும் பிரச்னையை முற்றிலும் தீர்த்து வைக்கப்படும். புளியந்தோப்பு, வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். கன்னிகாபுரம் விளையாட்டு திடல் சீரமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த பகுதியில் பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இப்பகுதி மக்களின் முக்கிய பிரச்னைகளை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர் மகளிர்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதனால் செல்லும் இடமெல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். மீண்டும் வெற்றிபெற உதயசூரியன் தினத்தில் வாக்களியுங்கள்” என்றார். வாக்கு சேகரிப்பின்போது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிக நகர் தெற்கு பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, திமுக நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post திருவிக நகர் தொகுதியில் மக்கள் பிரச்னைக்கு முன்னுரிமை அளிப்பேன்; திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பேச்சு appeared first on Dinakaran.