தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘‘வேலையில்லா திண்டாட்டம்தான் நாட்டின் தற்போதைய மிகப்பெரிய பிரச்னை. எனவே வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து நாடு விடுதலை பெற, வரும் சுதந்திரத் தினத்திலிருந்து 1 கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி தொடங்கப்படும். இதே போல வரும் ரக்ஷா பந்தனில் இருந்து நாடு முழுவதும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும், அக்னிபாதை திட்டம் ரத்து செய்யப்படும்’’ என்றார். பீகாரில் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்க உள்ளது.
The post லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1 கோடி பேருக்கு அரசு வேலை பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதி appeared first on Dinakaran.