இதுதொடர்பாக தாமஸ் ஐசக்தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தற்போது தேர்தலில் போட்டியிடுவதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், ‘தேர்தல் முடியும் வரை தாமஸ் ஐசக்கிடம் விசாரணை நடத்த வேண்டாம்’ என்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சை அணுகியது. அந்த மனுவில், ‘தாமஸ் ஐசக் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதால் வழக்கை நடத்த முடியவில்லை. எனவே அவரை விசாரணைக்கு உடனடியாக ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ‘தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் உங்களுக்கு ஏன் இந்த அவசரம்? தேர்தல் முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்திக் கொள்ளலாமே’ என்று டிவிஷன் பெஞ்ச் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.
The post கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.