இந்த பேரணியின்போது சிவானந்தா காலனி ரவுண்டானா பகுதியில் காரில் சென்ற ஒருவர், பேரணியில் நிர்மலா சீதாராமன் பிரசார வாகனத்தின் முன் காரை நிறுத்தினார். ‘‘பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஏத்தீட்டாங்க, சும்மா விடக்கூடாது. மோடி அரசை தூக்குவோம்’’ என கட்டை விரலை உயர்த்தி காட்டினார். இதைக்கேட்ட அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் சிரித்து கொண்டே கட்டை விரலை காட்டி உயர்த்தி காட்டினர். பேரணியில் நடந்த திடீர் எதிர்ப்பை பார்த்த பாஜவினர் அதிர்ந்து போயினர். சிலர் காரில் வந்தவரின் எதிர்ப்பு கோஷத்தை செல்போனில் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேரணியில் மிக குறைந்த அளவிலே பெண்கள் முன்னும் பின்னும் சென்றனரே தவிர ரோட்டின் இரு பக்கங்களிலும் மக்கள் யாரும் நின்று வரவேற்கவில்லை. வழக்கமான வாகன போக்குவரத்து நடந்தது.
The post கோவையில் ஜாலி ரைடு சென்ற நிர்மலாவை சுத்து போட்ட மக்கள்: ‘பெட்ரோல், டீசல், காஸ் விலையை ஏத்தீட்டாங்க… சும்மா விடக்கூடாது… மோடி அரசை தூக்குவோம்…’ appeared first on Dinakaran.