பிப். மாதம் தொடங்கிய வெயில் படுத்தி எடுத்து வந்த நிலையில், இந்த மழை மிகப் பெரிய நிம்மதியைக் கொடுப்பதாக இருக்கிறது. அதன்படி இன்றும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.