இதுவே அதிமுக ஜெயித்தால் மக்கள் ஜெயித்த மாதிரி உங்கள் கையில் வலுவான ஆயுதம் கிடைத்துள்ளது. அதுதான் இந்த தேர்தல். அந்த ஆயுதம் பாஜ கையில் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு உங்களை அழிப்பார்கள். அந்த ஆயுதத்தை அதிமுகவிடம் கொடுத்து பாருங்கள். தேர்தல் சமயத்திற்காக நான்கு நாட்கள் வரும் பிரதமரை தமிழ்நாட்டிலேயே தவம் கிடக்க வைப்போம். எங்களுக்கு காங்கிரசும் ஒன்றுதான் பாஜவும் ஒன்றுதான். மக்கள் தேவைக்காக நாங்கள் இரண்டு பேரையும் எதிர்ப்போம்.
நாங்கள் உங்களுக்காக கொடுக்கின்ற ஒரே வாக்குறுதி என்னவென்றால் ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களிடம் தமிழக மக்களுக்காக பேசி தேவையான அனைத்து விஷயத்தையும் பெற்றுத் தருவோம். வாயில் வடை சுடும் பாஜவையும், ஈடியை வைத்து மிரட்டும் பாஜவையும் இந்த தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் வைத்து மிரட்டும் பாஜவையும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் பாஜவையும் இந்த தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும். நாட்டையே அழிக்க நினைக்கிற பாஜவையும் ஆபத்தான அண்ணாமலையையும் இந்த தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post பொய் வாக்குறுதி தரும் பாஜவையும் ஆபத்தான அண்ணாமலையையும் தேர்தலில் ஓங்கி அடிக்க வேண்டும்: நடிகை விந்தியா பேச்சு appeared first on Dinakaran.