நகை மாவட்டம் வேதாரண்யம் தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால் பாதிக்கப்பட்டு வரும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிக்க போவதாக கறுப்புக்கொடி ஏற்றி, பிளக்ஸ் பேனர் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் விருகல்பட்டி புதூரில் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கறுப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
The post மக்களவைத் தேர்தல்: பல்வேறு மாவட்டங்களில் தேர்தலை புறக்கணித்து கறுப்புக்கொடி, பிளக்ஸ் பேனர் வைத்த கிராம மக்கள்!! appeared first on Dinakaran.