தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் மிக பலத்த மழை பதிவு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது.
குன்னூருக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணை பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவு. நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட்டில் 5 செ.மீ. மழை பதிவு. குன்னூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் மிக பலத்த மழை பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: