அண்ணாமலை 10,000 ஓட்டு கூட வாங்க மாட்டார் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது: ‘டெல்லி பாஜ மோடி அணி’ வேட்பாளர் பரபரப்பு பேட்டி

சிவகாசி: மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினர் டாக்டர் வேதா (எ) தாமோதிரன். இவர் விருதுநகர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். நடிகை ராதிகாவுக்கு மேலிடம் சீட் வழங்கியதால், அதிருப்தியடைந்த இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ‘டெல்லி பாஜ மோடி அணி’ சார்பில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர் சிவகாசியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நான் டெல்லி பாஜ மோடி அணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் என்னை போல் பலர் போட்டியிட தயாராக இருந்த போதும், மாநில தலைவர் அண்ணாமலை எங்களை புறக்கணித்து விட்டு வெளியூர் வேட்பாளர்களை இங்கு போட்டியிட அனுமதித்து இருக்கிறார். இதனால் நான் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் இந்தியாவின் துணை பிரதமராக வர வாய்ப்பு இருக்கிறது.

பாஜவில் எந்த தொண்டனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. ஸ்டார் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா தான் ஸ்டார் வேட்பாளர்கள். இப்போது போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் அனைவரும் டுபாக்கூர் வேட்பாளர்கள். அண்ணாமலை கோவை தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டு கூட வாங்க மாட்டார். தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜ வெற்றி பெறாது.
இவ்வாறு கூறினார்.

The post அண்ணாமலை 10,000 ஓட்டு கூட வாங்க மாட்டார் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது: ‘டெல்லி பாஜ மோடி அணி’ வேட்பாளர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: