கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு 1 டன் சாக்லேட் மாலை: பிரச்சாரத்தின் போது பிரமாண்ட வரவேற்பு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு ஒரு டன் சாக்லேட் மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் உதயசூரிய சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தென்சென்னைக்குட்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதியில், எம்எல்ஏ பிரபாகர் ராஜா தலைமையில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதை தொடர்ந்து கோயம்பேடு, சின்மயா நகர், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து மலர் தூவி வரவேற்றனர். திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த நிலையில் சில பகுதிகளில் வீடு, வீடாக வாக்கு சேகரித்தார்.

அந்த பகுதிகளில் வழிநெடுகிலும் மலர் மாலைகளை அணிவித்து, மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர். கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஒரு டன் சாக்லேட் மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பகுதிச் செயலாளர்கள் ராசா, கண்ணன், வட்டச் செயலாளர்கள் லோகு, மைக்கேல், கழக நிர்வாகிகள், முன்னணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு 1 டன் சாக்லேட் மாலை: பிரச்சாரத்தின் போது பிரமாண்ட வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: