தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டதில் இதுவரை ஒரு சல்லிக்காசு கூட பிரதமர் மோடி வழங்கவில்லை. தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக கருத முடியாது என நிர்மலா சீதாராமன் கூறி, நிதி வழங்க மறுத்து விட்டதை தமிழ் மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.எனவே, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வருகை புரிந்தாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத வகையில் பாஜவுக்கு உரிய பாடத்தை தமிழக வாக்காளர்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.
The post வெள்ள பாதிப்புக்கு சல்லி காசு கூட வழங்காத பிரதமர் மோடி தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் 1 தொகுதியிலும் பாஜ வெற்றி பெறாது: செல்வப் பெருந்தகை ஆவேசம் appeared first on Dinakaran.